கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுகாராணி 42 வயது அவரது கணவர் செல்வம் 46 வயது செல்வத்திற்கு கடந்த சில வருடங்களாக கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார், இதனால் அவருக்கு எந்த வேலையும் கிடையாது.
இந்நிலையில் அவர் நேற்று தன் மனைவியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார் சுகா ராணி பணம் தராததால் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார் பின்பு விரக்தி அடைந்த செல்வம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக