அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மு,பெ, சாமிநாதன் மிதிவண்டி வழங்கினார்!
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 11 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் வழங்கினார் ! நிகழ்வில் பள்ளிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தந்ததால் பேட்டரி வாகனத்தில் எளிதாக பள்ளிக்கு வர முடிகிறது என மாற்றுத் திறனாளி மாணவர்கள் அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்களிடம் அரசுக்கு நன்றி தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் துறைசார் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக