வேலூர் மாவட்டம் குடியாத்தம் கனவு அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆராய்ச்சி மையம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கொண்ட சமுத்திரம், ஊராட்சி இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கண் சிகிச்சை முகாமுக்கு கனவு அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்.கே.பரமாத்மா தலைவர், வி.கே.தேவமுகுந்தன் Ms.,MBA., துணைத் தலைவர், T.பொன்னரசன் செயலாளர், கே.மோகன் பொருளாளர், ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக இந்திரா நகர் வார்டு உறுப்பினர் எஸ். கலைவாணி ஊர் பெரியவர்கள் சி.வேலாயுதம் வி.மணி வி.ஜோதி ஆர்.கந்தன் வார்டு உறுப்பினர்கள் ஆர்.விக்னேஷ், டி.திருநாவுக்கரசு, பி.பார்த்திபன் BE (Civil), கே.ஏ.சிவசங்கர் MA.,BEd., எஸ்.பிரகாஷ் BSc., வி.சதீஷ்குமார், எஸ்.சிவா B.Com., எஸ்.மோகன்ராஜ் BBA., R.விக்னேஷ் BE., எஸ்.மயில்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஒற்றைத் தலைவலி, கண்ணில் புரை நீக்குதல், கிட்ட பார்வை, தூர பார்வை, கண்ணில் சதை வளர்ச்சி, தொடர்ச்சியான தலைவலி ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 150 க்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இறுதியில் ஒருங்கிணைப்பாளர் செ.சதீஷ்குமார் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக