திருப்பத்தூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான விளம்பர வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி* - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான விளம்பர வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி*

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான விளம்பர வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி

பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான விளம்பர வாகனம் இரண்டு நாட்களுக்கு முன்பு சேலத்தில் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து அருகே திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

பின்னர் அதிமுக முன்னால் பத்திர பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான விளம்பர வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் 

அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் வழியாக வாகனம் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/