திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் வசித்து வருபவர் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த மலையரசு (வயது 40). இவர் சேனன்கோட்டை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது வேடசந்தூரிலிருந்து சமத்துவபுரத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வம் (24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மலையரசு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் தலையில் பலத்த காயம் அடைந்தார். 


அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த மலையரசு இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். 


இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகுரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/