மனவளக்கலை மன்றத்தின் சார்பில் மனைவி நல வெட்பு விழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மனவளக்கலை மன்றத்தின் சார்பில் மனைவி நல வெட்பு விழா (30.8.2023)அன்று மாலை தரணம்பேட்டை பாவனா மகரிஷிகோயில் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு தியான பயிற்சி மனைவிக்கு காப்பு கட்டுதல் காந்த பயிற்சி மூச்சு பயிற்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது .சிறப்பு விருந்தினர்களாக குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் ரங்கா வாசுதேவன் அறக்கட்டளை தலைவர் கே.முருகவேல் முன்னாள் பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ரோட்டரி சங்கத் முன்னாள் தலைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் சரளா ராகவி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இறுதியில் அறக்கட்டளை பொருளாளர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக