சேத்தியாத்தோப்பு அருகே நின்ற லாரியின் மீது ஸ்கூட்டி மோதி விபத்து.தாய் பலி. குழந்தை படுகாயம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

சேத்தியாத்தோப்பு அருகே நின்ற லாரியின் மீது ஸ்கூட்டி மோதி விபத்து.தாய் பலி. குழந்தை படுகாயம்.

சேத்தியாத்தோப்பு அருகே
நின்ற லாரியின் மீது ஸ்கூட்டி மோதி விபத்து.தாய் பலி. குழந்தை படுகாயம்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பகுதி
 நான்கு வழி சாலையில் வாத்துகளை மேய்ப்பதற்காக ஏற்றி வந்த லாரி நின்று கொண்டிருந்தது.அப்போது அருகிலுள்ள தர்மநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி (28) என்ற பெண் தனது ஒன்றரைவயது பெண் குழந்தை ரிஷிகாவுடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாத்துகள் ஏற்றி செல்லும் லாரி நின்றிருந்ததால்
ஷாலினி சென்ற இரு சக்கர வாகனம் எதிர்பாராமல் நின்ற லாரியின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் .குழந்தை ரிஷிகா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் பயன்பாட்டுக்கு வராத நான்கு வழிச்சாலையில் சில மாதங்களில் இதுவரை மூன்றுக்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலை பயன்பாட்டுக்கு வராத நிலையில் அதில் வாகனங்களை அனுமதிப்பது இது போன்ற விபத்துகளுக்கு காரணமாகிறது என அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/