சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டரமாணிக்கம் பகுதியில், 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கண்டரமாணிக்கம் பகுதியில், என்னுடைய தாய்மண் – எனது தேசம் என்ற அடிப்படையில் தூய்மை படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் துவக்கி வைத்து தெரிவிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில், 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை அடிப்படையாக கொண்டு பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதில், ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப்பைகளை அப்புறப்படுத்தும் திட்டம் ஒன்றிய மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக