தூத்துக்குடி - ஆத்தூர் பஞ்சாயத்து பகுதிகளில், சாதி பெயரில் உள்ள 9 தெருக்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - ஆத்தூர் பஞ்சாயத்து பகுதிகளில், சாதி பெயரில் உள்ள 9 தெருக்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர், சாதி பாகுபாடுகளை களைய வேண்டும் என்று அறிவுறுத்தியதன், அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பரிந்துரைப்படி சாதி பெயரில் உள்ள 9 தெருக்களின் பெயர்களை மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தெரிவித்ததாவது,



நமது மாவட்டத்தில் சாதிகளின் பெயரில் உள்ள தெருக்களுக்கு தலைவர்களின் பெயர்கள், அப்துல்கலாம் போன்ற அறிவியலாளர்கள் பெயர்களை வைக்கலாம். நாங்குநேரியில் ஒரு தர்மசங்கடமான செயல் நடைபெற்றுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மனிதத்தன்மையுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.


நமது நாட்டில் அனைத்து தர மக்களும் இருக்கிறார்கள் அதாவது இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு சாதிகளை சேர்ந்த மக்ககளும் இருக்கிறார்கள். வெளிநாட்டுக்காரர்கள் நம்மை ஒரு இந்தியராகத்தான் பார்ப்பார்கள். நமது ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவற்றை சேர்த்துதான் ஒரு பொருளை தூக்க முடியும். அனைவரும் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். உங்கள் கிராமங்களுக்கு சாதி பெயர்களை நீக்கிவிட்டு சுதந்திரப்போராட்ட வீரர்களின் பெயரை சூட்டினால் தமிழ்நாட்டிற்கே மேல ஆத்தூர் ஊராட்சி முன்னுதாரணமாக திகழும்.


தெற்கு ஆத்தூர் நாடார் தெரு காமராஜர் தெருவாகவும், பம்பையாநகர் காமராஜர் தெற்கு தெருவாகவும், தெற்கு ஆத்தூர் தேவர் தெரு பசும்பொன் தெருவாகவும், சேனையர் தெரு ஸ்ரீஉச்சினிமாளி அம்மன் கோவில் தெருவாகவும், யாதவர் தெரு சடைச்சி அம்மன் கோவில் தெருவாகவும், பரதர் தெரு கொலுவைநல்லூர் கித்தேரியம்மான் கோவில் தெருவாகவும், கொலுவைநல்லூர் நாடார் தெரு காமராஜர் நகராகவும், கொலுவைநல்லூர் எஸ்.சி. தெரு டாக்டர் அம்பேத்கார் நகராகவும், கொலுவைநல்லூர் தேவர் தெரு நேதாஜி நகராகவும் மாற்றம் செய்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பெயர்கள் உடனடியாக அமல்படுத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/