ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 87 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு 5687 மாணவர்களுக்கு உணவு உண்பதற்கான தட்டு மற்றும் டம்ளர்களை நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் அந்தந்த மையங்களுக்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர். தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ). பிரபாகரன், சத்துணவு மேலாளர். தாஸ் பிரகாஷ், அலுவலக மேலாளர். அலமேலு மற்றும் சிற்றுண்டி திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக