ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77- ஆவது சுதந்திர தின விழா நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமையில் நடைபெற்றது.
சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய துணை பெருந்தலைவர். ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர். பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர். ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய துணை பெருந்தலைவர். சா. தீனதயாளன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக