ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 77வது சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் ஏ.வசந்தி தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், கந்தசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர். கிருஷ்ணன், ஓய்வு பெற்ற பீ.டி.ஓ.சண்முகம், கிருஷ்ணமூர்த்தி, தனசேகரன், வார்டு உறுப்பினர். தனசேகரன், ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை. ஏ வசந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஆசிரியைகள் சுந்தராம்பாள், கஸ்தூரி, அமுதா, ஜெயா, ஹேமாவதி ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி, பாடல், கிராமிய நடனம் முதலியவை இடம் பெற்றன. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியாக நாட்டுப் பன்னுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
- செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக