திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரத்தில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரத்தில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோடுவெளி ஊராட்சியில் கிராம சபைகூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.சித்ரா குமார் தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது நிதி வரவு செலவு, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் சிக்கனம் பற்றி விவாதித்தல், இணைய வழி மனைபிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பொதுமக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் அனைவருக்கும் பதிலளித்தார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எ.கே.எம்.சரத்குமார், வார்டு உறுப்பினர்கள் கே.வரலட்சுமிகமலக்கண்ணன், ஆர்.பிரகாஷ், எம்.ரமேஷ், இ.பாரதிஏழுமலை, எம்.சண்முகப்பிரியாமதன், ஊராட்சி செயலாளர் ஜெ.தாட்சாயணி, ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரம்யா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/