நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 77- வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 77- வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!.


இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 77- வது சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் (பொ). ரவி அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 


பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். வழக்கறிஞர். கார்த்திகேயன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர். ரேணுகாதேவி சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர். சுகுமார் மற்றும் உறுப்பினர். ராஜேஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். வேதையா, நல்லாசிரியர் விருது பெற்ற. வேலாயுதம், பள்ளி மேலாண்மை குழு தலைவர். கிருபாவதி, பள்ளி மேலாண்மை குழு துணைத்தலைவர். பஞ்சவர்ணம், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பள்ளி மேலாண்மை பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், நெமிலி காமராஜர் அறக்கட்டளை சார்ந்த வழக்கறிஞர். அன்பழகன், ஜெயபாலன், ராமமூர்த்தி மற்றும் நெமிலி பள்ளியில் எம்.பி.பி.எஸ் படித்து தேர்வான பி. ராகேஷ் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட ஆணையை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 


அதை தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/