ஸ்ரீ அபிராமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 77ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ அபிராமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இன்று சுதந்திர விழா அபிராமி அந்தாதி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் எம்.என். ஜோதிகுமார் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரத்தில் தமிழர்களின் பங்களிப்பையும் குறிப்பாக குடியாத்தத்தின் பங்களிப்பை குறித்து எடுத்துரைத்தார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆராஅமுதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி இயக்குனர் கே.ஜோதிராம் அவர்கள் கலந்து கொன்டு தேசியம் தான் நமது வலிமை எனவும் அதை மாணவிகளுக்கு உணர்த்த வேண்டியது பேராசிரியர்களின் கடமை என்றும் பேசினார். துணை முதல்வர் சுபாஷிணி நன்றியுரை ஆற்றினார். அறங்காவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவியர்கள், அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக