நெமிலி அருகே 77- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் கிராம சபை கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

நெமிலி அருகே 77- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் கிராம சபை கூட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் அடுத்த வேளியநல்லூர்  ஊராட்சியில் பிள்ளைப்பாக்கம் காலனியில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சண்முகம் தலைமையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா ஈஸ்வரன் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் கலைஞரின் அனைத்து கிரா ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 600 தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சி சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இதில் ஊராட்சி மன்ற தலைவர். அமுதா சண்முகம், ஊராட்சி மன்ற துணை தலைவர் ரம்யா சீனிவாசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். கல்யாணி, உண்ணாமலை, ராஜ்குமார்,கட்சாலை, சுஜாதா மற்றும் கிராம
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



- செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/