நாசரேத், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ஜெயக்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி தாளாளர் ஜே. ஜெயக்குமார் ரூபன் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து பின்பு சமாதானத்திற்கு அடையாளமாக புறாக்களை பறக்கவிட்டு சுதந்திர தின விழா சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் முனைவர்கள் ஸ்டேன்லி, ஜெனிபர் ஜாண், ஜெமில்டா, வினோதா, ஆக்னஸ், நிஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
விழாவின் முடிவில் பேராசிரியர் பிரான்சிஸ் டேவிட் ராஜா நன்றி தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் அறிவுரைப்படி கல்லூரி முதல்வர், உடற் கல்வி இயக்குநர் தே. ஜோஸ் சுந்தர், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜிம் ரீவ்ஸ் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஜாண்சன் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவின் அடுத்த கட்டமாக, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை புல்தரை மைதானத்தில் இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழாவை ஒட்டி ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியர் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டியில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியற் கல்லூரி வெற்றி வாகை கல்லூரி சூடியது.
இதனை கல்லூரியின் தாளாளர் ஜே.ஜெயக்குமார் ரூபன் மற்றும் முதல்வர் முனைவர் எஸ் ஜெயக்குமார் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களையும் வெகுவாக பாராட்டி வெற்றிக் கோப்பையினை வழங்கினார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக