கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை காயத்ரி வித்யாலயா மழலையர் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை காயத்ரி வித்யாலயா மழலையர் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஸ்ரீ காயத்ரி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன். ஹமீது அப்துல் காதர் தலைமை தாங்கினார் இதில் ஓய்வு தலைமை ஆசிரியர் புலவர் சி.க . சீனிவாசன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.


இதில் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு  பரிசுகள்,சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது  இவ்விழாவில் INTJ மாவட்ட செயலாளர் M.ஹமீது கவுஸ். ஜெகன்நாதன்.மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


- செய்தியாளர் சாதிக் அலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/