77 வது சுதந்திர தின விழா குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

77 வது சுதந்திர தின விழா குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ஆர்.செந்தில்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக  குருவாயல் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடம்மாள் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி இனிப்புகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.  


உதவி தலைமை ஆசிரியர் ஆர்.சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இ.சண்முகம், வார்டு உறுப்பினர்கள் பி.கோபால், வாசு, மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர். க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/