திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாமரைப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் து.கீதாதுளசிராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது நிதி வரவு, செலவு கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சுத்தமான குடிநீர் சிக்கனம் பற்றி விவாதிக்கப்பட்டது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே. தமிழரசன், வார்டு உறுப்பினர்கள் எம்.லாவண்யா மணிகண்டன், ஆர்.கீதா ரமேஷ், எஸ்.உமாபதி, பி.திலகவதி பிரபு, இ.தீனதயாளன், எஸ்.குமார், வி.உஷா விஜயபால், ஓய்.லட்சுமி யுவராஜ், ஊராட்சி செயலாளர் ஆதிமூலம், ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் என்.ஞானமூர்த்தி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக