புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, கேசராபட்டியில் சி. டி. இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், நடைபெற்ற 77 ஆவது சுதந்திரதின விழாவில் மதுரை மெட்ரோ பாலிஷ் ரோட்டரி சங்க தலைவர் இப்ராகிம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவிற்கு தலைமை வகித்தார்
பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் பழ.சிதம்பரம் வரவேற்றார் தாளாளர் அன்னம் சிதம்பரம் முன்னிலை வகித்தார், முத்தமிழ்ப்பாசறை அறங்காவலர்குழுச்செயலாளர் நெ.இரா.சந்திரன் மற்றும் மதுரை ரோட்டரி மெட்ரோ பாலிஷ் சங்க நிருவாகிகள் வாழ்த்துரை வழங்கினர், உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார்.
முன்னதாக பொன்னமராவதி காந்தி சிலையிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடைபெற்றது, இது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது, மேலும் 77வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் 77 மரக்கன்றுகள் நடப்பட்டன, விழாவில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானபேர் பங்கேற்றனர், இறுதியாக ஆசிரியை பிரவினா நன்றி கூறினார்.
- எம். மூர்த்தி, தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக