புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு,கொடியேற்று விழா நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி-யின் அறுபத்தி ஒன்றாவது பிறந்த நாளை முன்னிட்டு சட்டமேதை அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு நகர விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பின்பு தொடங்கிய எம்பி திருமாவளவன் பிறந்த நாள் விழாவிற்கு நகரச்செயலாளர் மலை தேவேந்திரன் தலைமை தாங்கினார்.நகர துணைச்செயலாளர் பாரத் வரவேற்புரை வழங்கினார்.மாநில துணைச்செயலாளர் திலீபன்ராஜா, அ.சா.தொ.வி.மு.மா.தொகுதி துணைச் செயலாளர் ரமேஷ் இளந்தமிழன், க.இ.பே.மா.து.அ.பொன்.தமிழ்அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி துணைச் செயலாளர் சுடர்வளவன் கல்வெட்டினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேற்கு மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் வெள்ளைநெஞ்சன் கட்சி கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். மாணவர் சுகநிலவன் தொல்.திருமாவளவன் அவர்களின் எழுச்சி பயணங்கள் பற்றிய வீர உரையாற்றினார். இப்பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 200-க்கு மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டன. இதில் அண்ணா நகர் முகாம் கார்த்திக் ராஜா, சந்தோஷ்குமார், தோழமை கட்சிகள், பொது மக்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நகர துணைச்செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக