குமரியில் 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 64 வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

குமரியில் 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 64 வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

குமரியில் 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 64 வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.  குமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். 


கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு குறித்த புத்தகத்தினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டு கூறியதாவது:-  குமரி மாவட்டத்தில் தற்போது 1,695 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தமட்டில் 310 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவிலில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சலில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரத்தில் 273 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூரில் 268 வாக்குச்சாவடிகளும், விளவங்கோட்டில் 272 வாக்குச்சாவடிகளும் தற்போது உள்ளன.  64 வாக்கு சாவடிகள் கன்னியாகுமரி தொகுதியில் 3 வாக்குச்சாவடியும், நாகர்கோவில் தொகுதியில் 16 வாக்குச்சாவடியும், குளச்சல் தொகுதியில் 5 வாக்குச்சாவடியும், பத்மநாபபுரத்தில் 10 வாக்குச்சாவடியும், விளவங்கோடு தொகுதியில் 28 வாக்குச்சாவடியும், கிள்ளியூர் தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடி என மொத்தம் 64 வாக்குச்சாவடிகள் தற்போது செயல்பட்டு வரும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 


6 சட்டமன்ற தொகுதிகளிலும் 22 வாக்குச்சாவடிகளின் பெயர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி மாற்றம் தொடர்பாக 2 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தால் அந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். 


முன்னதாக வாக்குச்சாவடிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்போது அதன் அருகில் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் எனவும், பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வாக்குச்சாவடிகளின் அருகில் இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள்- அரசியல் கட்சியினர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா, தாசில்தார்கள் ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), வினைதீர்த்தான் (தோவாளை), கண்ணன் (கல்குளம்), அனிதா குமாரி (கிள்ளியூர்), குமாரவேல் (விளவங்கோடு), முருகன் (திருவட்டார்), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், துணை தாசில்தார்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


- கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என். சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/