நீலகிரி மாவட்ட திமுக சார்பில் தலைவர் கலைஞர் அவர்களின் 5-வது ஆண்டு நினைவு நாள்
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், மாநில விளையாட்டு மே்ம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, சோலூர் பேரூர் செயலாளர் பிரகாஷ், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, கர்ணன், தேவராஜ், யோகேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கழக நிர்வாகிகள் அனைவரும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு நிர்வாகிகள் மலர்தூவி மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் உதகை நகர அவை தலைவர் ஜெயகோபி, துணை செயலாளர்கள் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்திக், வெங்கடேஷ், ராமசந்திரன், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, செல்வராஜ், கீதா, நாகமணி, மேரி பிளோரீனா, வனிதா, பிரியா வினோதினி, பிளோரீனா, மாவட்ட அணிகளின் மேத்யூஸ், செல்வராஜ், மூர்த்தி, ஜெயராமன், தருமன், மார்கெட் ரவி, அமலநாதன், மத்தீன், ஆட்டோ ராஜன், தியாகு, பௌ்ளன், கன்னியப்பன், ஜோகி, சிவகுமார், கழக நிர்வாகிகள் வெங்கடேஷ், பாபு, அபு, ரகமத்துல்லா, மஞ்சுகுமார், கிட்டான், விஜயகுமார், உதகை வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், ராஜூ, காளி, மூர்த்தி, தொ.மு.ச நிர்வாகிகள் ஆனந்தன், சந்திரன் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக