தூத்துக்குடி அடுத்த செய்துங்கநல்லூர் - சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி அடுத்த செய்துங்கநல்லூர் - சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி, டவுன் பகுதியை சேர்ந்தவர் குரு கணேஷ் மற்றும் இவருடைய நண்பர்கள் 5 பேரும் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு மீண்டும் திருச்செந்தூரில் இருந்து காரில் திருநெல்வேலிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை குருகணேஷ் ஓட்டி வந்துள்ளார்.


செய்துங்கநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குருகணேஷ், டவுண் ரெங்கநாதபுரம் கண்ணன் மகன் கந்தசாமி(28), சுடலைமணி, முத்துகுமார், மனோஜ் குமார், ஹரிஹரன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாகச் சென்றவர்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார். விபத்தினால் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


அங்கு கந்தசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/