கடலூரில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

கடலூரில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 5வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக கடலூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி கடலூர் மேயர் திருமதி.சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில்  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் படம்  அலங்கரிக்கப்பட்ட வாகனம் திருப்பாதிரிப்புலியூர் ஜவான் பவன் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா பாலம் வழியாக சென்று பாரதி சாலையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு  சென்றனர்.


பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் திருப்பாத் திரிப்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/