கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து 5 மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து 5 மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.


கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து 5 மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு. கள்ளக்குறிச்சி ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ் முனியன் ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்தில் கவனக்குறைவாக நடந்துக்கொண்டதால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட வருவாய்துறையினர் தங்கள் தங்கள் அலுவலகம் முன்பு 29-8-23 நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் செய்தனர். இன்று 30-8-23 திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தினர் பணிக்கு செல்லாமல் காத்திருப்பு போராட்டம் செய்வதால்  தாசில்தார் அறை உள்பட  அலுவலகமே வெறிச்சோடி காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/