கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் திமுக தெற்கு ஒன்றியம் சார்பாக கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் திமுக தெற்கு ஒன்றியம் சார்பாக கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம். க. கார்த்திகேயன் எம். எல். ஏ. அவர்களின் அறிவுறுத்தலின்படி திருக்கோவிலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் எம்.ஆர். ராஜேந்திரன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் டாக்டர்.கலைஞர் முத்தமிழர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலைஞரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 


இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் எல். ஜெய்சங்கர், ஒன்றிய பொருளாளர் சி. காமராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி. பிரகாஷ், துணைச் செயலாளர்கள் இ. முருகன், எம். சுப்பிரமணியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் எஸ். சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், கோமாலூர் கிளைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், டி. ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.


- தமிழக குரல் திருக்கோவிலூர் தாலுக்கா செய்தியாளர் ப.பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/