கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக சார்பில் மலரஞ்சலி. எம்எல்ஏ பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக சார்பில் மலரஞ்சலி. எம்எல்ஏ பங்கேற்பு.

கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டன. முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் 5ம் ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரி யில் நேற்று நடைபெற்றது. 


இதில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், திமுகவின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜிதேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ திருமதி. வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/