செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம் கே டி. கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக