புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 526 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 526 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 526 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.


இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் பொன்னமராவதி ஒன்றிய பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி, பள்ளிக் கல்வித் துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திமுகவைச் சேர்ந்த அரிமளம் ஒன்றிய செயலாளர் இளையராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலவயல் முரளி சுப்பையா,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேந்தன்பட்டி இளையராஜா, ஒன்றிய துணை பெரும் தலைவர் தனலட்சுமி அழகப்பன்,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சுந்தரி ஜூவல்லரி ராமையா, ஆலவயல் சாமிநாதன், முன்னாள் நகர செயலாளர் கோவை ராமன் நகர அவைத் தலைவர் தட்சிணாமூர்த்தி,இடையாத்தூர் பாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/