திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் பாஜக சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் வெற்றிப் பெற்றதை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு 14-வது வார்டு உறுப்பினர் குருசேவ் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மேம்பட்ட மேம்பாட்டு திட்ட மாவட்ட தலைவர் வினோத்குமார் துணைத் தலைவர் ஜெயக்குமார், ஓ பி சி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் குமரேசன், லோகேஷ், செல்வகுமார், ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
இதில் இரவு பகலாக பாடுபட்டு இந்தியாவை உலக அளவில் தலை நிமிரச் செய்த விஞ்ஞானிகளுக்கும் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக