மதுரை, எல்.கே.பி. நகர் நடுநிலைப்பள்ளியில், சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டமானது, மதுரை கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர் கயல் விழி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார். அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி சந்திராயன் 3 செயல்பாடும் விதம் அதன் பயன்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்கி கூறினார். வினாடி வினா நடைபெற்றது.
அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆசிரியை, அனுசியா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராஜ வடிவேல் நன்றி கூறினார். விழாவில், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் மனோன்மணி, அருவகம், சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக