தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் - தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் பூட்டை உடைத்து ரூபாய் 3,20,000/- மதிப்புள்ள 3 டன் முந்திரிபருப்பு மூட்டைகளை திருட்டு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் - தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் பூட்டை உடைத்து ரூபாய் 3,20,000/- மதிப்புள்ள 3 டன் முந்திரிபருப்பு மூட்டைகளை திருட்டு.


தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் வாட்ச்மேனை கத்தியை காட்டி மிரட்டி குடோனின் பூட்டை உடைத்து முந்திரிபருப்பு மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்து சென்ற 5 எதிரிகள் கைது - ரூபாய் 3,20,000/- மதிப்புள்ள 3 டன் முந்திரிபருப்பு மூட்டைகள் மற்றும் கொள்ளையடித்து செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல், விரைந்து கைது செய்த தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு.


தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்த ராஜன் மகன் பால்ராஜ் (48) என்பவர் முந்திரிபருப்புகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் to தூத்துக்குடி சாலை பகுதியிலுள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அதில் முந்திரிபருப்பு மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 07.08.2023 அன்று இரவு மேற்படி குடோனிற்கு இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த வாட்ச்மேனை கத்தியை காட்டி மிரட்டி குடோன் ஷட்டரின் பூட்டை உடைத்து அங்கு இருந்த 40 முந்திரிபருப்பு மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மேற்படி பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தெர்மல் நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி பெரியசாமி நகர் பாலம் பகுதியை சேர்ந்தவர்களான மூர்த்தி மகன்களான அழகர் (27), மணிகண்டன் (32), வேலுசாமி மகன் மாரிமுத்து (20), தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் சுரேஷ் (20) மற்றும் முத்தையாபுரம் சுந்தர்நகரை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் அஜித்குமார் (26) ஆகியோர் மேற்படி குடோனில் வாட்ச் மேனை கத்தியை காட்டி மிரட்டி முந்திரிபருப்பு மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


உடனே மேற்படி தனிப்படை போலீசார் அழகர், மணிகண்டன், சுரேஷ், அஜித்குமார் மற்றும் மாரிமுத்து ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்து சென்ற ரூபாய் 3,20,000/- மதிப்புள்ள 3 டன் 200 கிலோ முந்திரிபருப்பு மூட்டைகள் மற்றும் கொள்ளையடித்து செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்து 3 டன் முந்திரிபருப்பு மூட்டைகளை மீட்ட தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/