ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுகவின் 27 வார்டு செயலாளருக்கான அறிமுக கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுகவின் 27 வார்டு செயலாளருக்கான அறிமுக கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் P.ஐயப்பன் முன்னிலையிலும் 27 வார்டு செயலாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் வார்டு செயலாளர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த பின்பு கப்பலூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடி விதி மீறி அமைந்துள்ளது. இதை உடனடியாக சரி செய்ய ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி நடைபெற்று மீட்டெடுத்தோமோ அதே போல் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்று இந்த சுங்கச்சாவடியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 


மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாடு மக்களை ஏமாற்றும் வகையில் நடைபெற்றது, என்றும் அன்னதானம் என்ற பெயரில் மக்களை பட்டினி போட்டு விட்டனர் என்று கூறினார். நிகழ்ச்சியில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திருமங்கலம் நகர் 27 வார்டு செயலாளர் மற்றும் நகர நிர்வாகிகள், நகர சார்பு அணி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/