அதனைத் தொடர்ந்து காலை 11.00 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் நாசரேத் நகர வணிகர் சங்க 23 வது ஆண்டு விழா இனிதே துவங்கியது, சங்க நிர்வாக குழு உறுப்பினர் பாபு செல்வன் வரவேற்று பேசினார். 2023 - 24 ஆண்டுக்கான புதிய தலைவராக ஜெபஸ் திலகராஜ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை உரை ஆற்றினார், அவர் பேசுகையில் அரசு தடை செய்ய பட்ட குட்கா போன்ற பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது என்றும், வணிகர் சங்க தொடர் முயற்சியின் விளைவாக நாசரேத் ரயில் நிலையம் மேம்படும் வகையில் புதிதாக நகரும் படிக்கட்டுகள் அமைக்க (எஸ்கலட்டர்) மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனவும் கூறினார்.
முன்னிலையாக VSR குழுமத்தின் உரிமையாளர் VS ராமச்சந்திரன் கலந்து கொண்டார், புதிய பொருளாளராக லயன் அகிலன் பொறுப்பேற்று கொண்டார். துணை தலைவராக ஆறுமுகம், துணை செயலராக செய்யது ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
நிர்வாக குழு புதிய உறுப்பினராக ஜெபராஜ், நோவா சாலமோன், செல்வாஸ் செல்வராஜ் ஆகியோர் தேர்தெடுக்கபட்டனர். கூட்டத்தில் பொறியாளர் வே. இரஞ்சன் கூறுகையில் நாசரேத் நகரம் தாலுகா அந்தஸ்து பெற முதலில் குறுவட்டமாக மாற வேண்டும் என பரிந்துரை செய்தார், இதனை சங்கத்தில் தீர்மானமாக நிறைவேற்றினர்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் மாமல்லன், தேவதாஸ் ஆகியோர் பேசுகையில் வியாபாரம் இன்னும் மேம்படுத்துவதற்கு தொழில் சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் பேசும் போது வணிகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன? அவற்றை வணிகர் சங்கம் எவ்வாறு தீர்த்து வைக்கிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்து கூறினார்.
அதன் பின்பு பேசிய வணிகர் சங்க செயலர் பொறுப்பேற்ற வே செல்வன் அனைத்து வணிகர்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும், வருங்காலங்களில் சிறப்பாக செயல் படுவோம் என கூறி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி அனைவரும் நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவுற்றது.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக