ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கணபதிபாளையம் எடக்காட்டில் வசித்து வருபவர் ரமேஷ். ஒக்காளி என கூறப்படும் கட்டைக்கால் கலையின் மீது மிகவும் ஆர்வம் கொண்ட நடனக் கலைஞர். இவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கணபதி பாளையத்திலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 22 கிலோமீட்டர் கட்டைக்கால் விழிப்புணர்வு சாதனை நடை பயணம் மேற்கொண்டார்.
இந்த சாதனை விழிப்புணர்வு கட்டைக்கால் நடை பயணத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு பாதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுவாக அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக