20 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் நடைபெற்றது . நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

20 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் நடைபெற்றது . நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

.20 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன் விடுதலை செய்யக்கோரி, மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் கடலூர் ஜவான் பவான் சாலையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. 


இந்த போராட்டத்திற்கு ம ஜ க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் வேல்முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் நாசர், பொது செயலாளர் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், திருமார்பன், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இந்த போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில்,டி எஸ் பி பிரபு  இன்ஸ்பெக்டர்கள்  உதயகுமார், குருமூர்த்தி கவிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சம்பவத்தால் கடலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/