திருவள்ளூர்.ஆக._13. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட எர்ணாகுப்பம் ஸ்ரீ அம்பிகா நகர் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்ச முகீஸ்வரர் சமேத திருக்கோயில் 19வது ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் 12ஆம் தேதி அன்னதானமும் அம்மனுக்கு அலகு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது ஞாயிற்றுக்கிழமை 13ம் தேதி இன்று காலை 9 மணிக்கு பால்குடம் 11 மணிக்கு கூழ்வார்த்தல் நடைபெற்றது மாலை 6 மணிக்கு கும்பம் போடுதல் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக