காணொளி காட்சி வாயிலாக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ரூபாய் 16கோடி மதிப்பில் மேம்படுத்த அடிக்கல் நாட்டினார் பாரத பிரதமர், பாரத பிரதமர் தொடங்கியுள்ள அம்ரித் பாரத் திட்டத்தின்படி தென்னக ரயில்வேயில் 25 ரயில்வே நிலையங்கள் மேம்படுத்த சுமார் 616 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 18 ரயில்வே நிலையங்கள் அடங்கும். பாரத் திட்டத்தின் மூலம் ரயில்வே நிலையங்களில் மேம்பாடு பணிகளாவன, நடைமேடை மேம்பாலம், மின் தூக்கி, மின் நகரும்படி, ரயில்வே நிலையங்களில் சுற்றுப்புற மேம்பாடுகள், கார் மற்றும் டூவீலர் நிறுத்த இடம், பயணிகள் தகவல் நிலையம், நடைமேடை மற்றும் நடைமேடை கூரைகளில் அபிவிருத்தி செய்தல், மின் விளக்கு, மின்சார தடையில்லா வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள் ஆகியன செய்யப்பட உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக