ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் நேற்று (15/8/23) நாட்டின் 77~வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் நேற்று (15/8/23) நாட்டின் 77~வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது!

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் நேற்று (15~8~23) நாட்டின் 77~வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது! நிகழ்ச்சிக்கு வட்டக்கிளையின் துணை தலைவர் .ஆர். வெங்கிடகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்! சங்க வளாகத்தில் வட்டக்கிளையின் தலைவர் ஜனாப். கே.மஹபூப்பாட்சா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்! 



தேசிய கொடியேற்று வைபவத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் "வந்தேமாதரம்" "ஜெய்ஹிந்" என விண்ணதிர முழக்கமிட்டனர். மூத்த உறுப்பினர்கள்  பிலாவடியான், இராஜேந்திரன், காசிராஜன் ஆகியோர் நாடு சுதந்திரம் அடைய பேராடிய தலைவர்களையும், அவர்கள் செய்த தியாகத்தையும் விரிவாக எடுத்துரைத்தனர்! 


நிகழ்ச்சியின் நிறைவாக வட்டக்கிளையின் சங்கத்தின் அமைப்பு செயலாளர்  டி.வையத்துரை அவர்கள் நன்றி நவிழ நிகழ்ச்சி நிறைவாக நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் வட்டக்கிளையின் பொருளாளர் ஆர். பாலகிருஷ்ணன், இனைச் செயலாளர் எம். நடராஜன் மற்றும் மூத்த உறுப்பினர்கள். பாண்டி,முருகன், மதலைமுத்து, ரகுநாதன், சுப்பிரமணியன், சுபஹானியா, பெரோஷ்கான், முகமதுயாசின்  பிரேமாராணி ,பாண்டிச் செல்வி,முத்துலெட்சமி, தமிழ் குழலி, சரோஜா மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்! நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெயந்தி சிறப்பாக செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/