திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே ரூபாய் 1.56 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே ரூபாய் 1.56 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த வெள்ளைக்குட்டை, கொத்தகோட்டை மற்றும் குரும்பட்டி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் 2022-2023 கீழ் ரூபாய் 1.56 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தார்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்து சிறப்பித்தார். 


இந்நிகழ்ச்சியில் எஸ்.தாமோதரன், தே.பிரபாகரன், காயத்ரி பிரபாகரன், பூ.சதாசிவம், எஸ்.பழனி, மனோகரன், சுந்தரமூர்த்தி, கோதண்டன், அம்சா, வி.எஸ்.கார்த்திக், அச்சுதன், கணபதி, பழனி, கோவிந்தசாமி, பாஸ்கரன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/