திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வட்டார அளவிலான 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வட்டார அளவிலான 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட, மேல்பள்ளிப்பட்டு  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் தினத்தை முன்னிட்டு 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு   வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 



இதில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர்  மு. பெ .கிரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார் . பின்னர் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் த மனோகரன், மாவட்ட கவுன்சிலர்  செ செந்தில்குமார், மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பானுமதி ஜம்புலிங்கம், கிருஷ்ணவேணி சங்கர், மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/