கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை


கடந்த 2016-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கோளப்பாறை கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்த கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அமுல்தாஸ் மகன் ஆரோக்கியசாமி  சுரேஷ் என்பவர் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கற்பழிப்பு  வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடித்து எதிரியின் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.


இந்நிலையில் இன்று 23.08.2023-ந் தேதி விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி .ஹெர்மிஸ் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் எதிரி ஆரோக்கியசாமி  சுரேஷ் குற்றவாளி என்று உறுதி செய்து, 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 11,000/- ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 4 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 4 லட்சம் நிவரான தொகை வழங்க உத்தரவிடார்.


இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மோகன்ராஜ் பாராட்டுகளை தெரிவித்தார்.


- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்- க.சமியுல்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/