திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பாக கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு 1008 சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கினார். மேலும் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து இந்து மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
அடுத்து பவானி அம்மனை சாமி தரிசனம் செய்தார். பின்னர் பெரியபாளையம் அடுத்த வேலப்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு உமையாள் மகேஸ்வரி உடனுறை சிவசக்தி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து இந்து மக்கள் கட்சியின் கொடியை ஏற்றினார். இந்த ஆன்மீக நிகழ்ச்சிகள் உத்திரமேரூர் அன்னபூரணி அம்மா, திருவாசகப் பெற்றார் ஐயா வாதவூர் அடிகளார், தக்ஷனா காலி பீடத்தின் பீடாதிபதி மோகன் அம்மாள், சரபேஸ்வரர் ராக்காச்சி குரு திருத்தல அறக்கட்டளை அறங்காவலர் திருமதி காயத்ரி தேவி மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி இந்து மக்கள் கட்சி தெய்வீகப் பேரவை மாநில தலைவர் மீஞ்சூர் சிவஸ்ரீ வி.கார்த்திக் சிவம் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சூரப்பட்டு கே.மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் அரசுகுமார், மாவட்ட செயலாளர் வசந்தகுமார், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் அசோக், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகுராமன், கும்மிடிப்பூண்டி தொகுதி தலைவர் துளசி, வேலப்பாக்கம் அசோகன், கஜேந்திரன், கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட தெய்வீக பேரவை பொறுப்பாளர் கோவர்தனன் வரவேற்றார் மற்றும் நிகழ்ச்சி ஏற்பட சிறப்பாக செய்திருந்தார்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக