1 வயது முதல் 19 வயது வரையிலான அனைவருக்கும் அல்பெண்ட சோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

1 வயது முதல் 19 வயது வரையிலான அனைவருக்கும் அல்பெண்ட சோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவின்படியும் புதுக்கோட்டை துணை இயக்குனர் சுகாதார பணிகள், பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோரது வழிகாட்டல்களின்படி 1 வயது முதல் 19 வயது வரையிலான அனைவருக்கும் அல்பெண்ட சோல் மாத்திரைகள் அட்டவணைப்படி வழங்கப்பட்டு வருகிறது அங்கன்வாடி மையங்கள்/பள்ளி மாணவர்கள்/ இளம் பெண்கள் ஆகிய அனைவருக்கும் இன்று வழங்கப்படுகிறது விடுபட்டவர்களுக்கு 24.8.23 அன்று வழங்கப்பட இருக்கிறது.


அங்கன்வாடி அலுவலர்கள் சுகாதார அலுவலர்கள் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்கள், மேலைச்சிவபுரி அரசு மேனிலைப்பள்ளியில் பொ த ஆ மலைச்சாமி ஆசிரியை ஜூலியட் பிரபா ஆகியோர்கள் முன்பாக மாத்திரைகள் வழங்கப்பட்டது கட்டையாண்டிபட்டி நடுநிலைப்பள்ளியில் பொ த ஆ விலாஷினி மற்றும் ஆசிரியர்கள் முன்பாக மாத்திரை வழங்கப்பட்டது மேலும் திருக்களம்பூர் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்/இடையபுதூர் அங்கன்வாடி பொறுப்பாளர் கிராமசுகாதார செவி வியர்கள் சாந்தி ராணி மேற்பார்வையாளர் கோட்டை திலகம் சுகாதார ஆய்வாளர் உத்தமன் நிகழ்வுகளில் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/