

இது குறித்து துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:குளோபல் ட்ரையம்ப் அறக்கட்டளையானது மதிப்பீடுகள் ஆராய்ச்சி கல்வி மற்றும் நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி போன்றவற்றை பகுப்பாயும் உலகளாவிய ஓர் முன்னணி நிறுவனமாகும். கல்வியியல் மற்றும் சந்தைப்படுத்துதலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை ஆராய்ந்து அங்கீகரிக்கும் விதமாகவும், அறிவை மேம்படுத்த உதவும் தளமாகவும் ,விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யசபா டாக்டர். கனிமொழி, என்.வி.என் சோமு ஆகியோர் விருதினை வழங்கினர்.
துறையின் டீன் சிறப்புரையாற்றினார். டீனுக்கு பல்கலைக்கழகத்தின் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் மற்றும் துணை பேராசிரியர்கள் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக