கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவின் கம்பம் அழைப்பு, அக்னி சட்டி பால்குடம், அலகு குத்துதல், கம்பம் ஆற்றில் விடுதல், வான வேடிக்கை என வேண்டுதல்கள் அனைத்தும் அமராவதி ஆற்றங்கரையில் நடப்பதால் மக்களின் வசதிக்காக கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றை தூய்மைப்படுத்த மாஸ் கிளீனிங் பணி நடைபெற்றது இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் அவர்கள் நேரில் சென்று தூய்மை பணிகள் மற்றும் கடைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்
இதில் மாநகராட்சி ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள், மாநகர் நல அலுவலர் திரு. இலட்சிய வர்ணா அவர்கள், மண்டலம் -1 தலைவர் திரு. சக்திவேல் அவர்கள், 17 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. சக்திவேல் அவர்கள், 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. மஞ்சுளா அவர்கள், 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. அருள்மணி அவர்கள், சுகாதார ஆய்வாளர் திரு. விஜய் ஆனந்த் அவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக