கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் காவிரி கரையோரங்களிலும் சில தினங்களுக்கு முன்பு மழை பெய்த தொடர்மழையால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
>இதன் காரணமாகும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது, இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வது குறைந்ததால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து படிப்படியாக சரியத் தொடங்கி தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு நேற்று 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 20,000 கன அடியாகவும் இன்று காலை 16 ஆயிரம் கனஅடியாக படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு ஒகேனக்கல் சின்னாற்றிலிருந்து கோத்திக்கல்பாறை, மணல்திட்டு பகுதிகளில் பரிசல் இயக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் மெயினருவியில் சேதம் ஏற்பட்டு உள்ளதால். சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று பரிசல் இயக்க அனுமதியளித்ததால் சின்னாறு பரில்துறையில் கங்கா பூஜை செய்த பிறகு பரிசல் சவாரி துவங்கப்பட்டது. 38 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக