தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 15 % வரை கட்டணம் உயர்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 செப்டம்பர், 2022

தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 15 % வரை கட்டணம் உயர்வு.

images%20(7)
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. 


அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 


இதனை தொடர்ந்து இன்று (01-09-2022) முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 


அந்த வகையில், நள்ளிரவு முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி - திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு - திண்டுக்கல் - புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி - திருச்சி - கரூர், மேட்டுப்பட்டி - சேலம் - உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி - புதுச்சேரி - திண்டிவனம், நத்தக்கரை - சேலம் - உளுந்தூர்பேட்டை, ஓமலூர் - நாமக்கல், தர்மபுரி - கிருஷ்ணகிரி - தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி - திருச்சி - திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம் - மதுரை - தூத்துக்குடி, சமயபுரம் - பாடலூர் - திருச்சி, செங்குறிச்சி - உளுந்தூர்பேட்டை - பாடலூர் உள்பட 28 சுங்கச்சாவடிகள் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad